காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணம் ஆன பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள சமீரா, படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகள், அவர்களின் ஒவ்வொரு விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் அவ்வப்போது டிப்ஸ் கொடுப்பவர், டிக்டாக் செய்து வீடியோவும் வெளியிடுவார். இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார் சமீரா.
அவர் கூறுகையில், ‛‛நேற்று கொரோனா பரிசோதனை செய்தேன், பாசிட்டிவ் என வந்தது. இருப்பினும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடவுளின் அருளால் சாஸி, சாசுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நேர்மறையான எண்ணங்களுடன் மனஉறுதியாக இருக்க வேண்டிய தருணம் இது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார் சமீரா.




