Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 2' விவகாரம் - 'கம்முனு' இருக்கிறாரா கமல்ஹாசன்?

15 ஏப், 2021 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Indian-2-issue-:-Kamal-still-keeps-silent

இன்றைய சினிமா செய்திகளில் அதிகம் இடம் பெறுபவராக ஷங்கர் இருக்கிறார். நேற்று தன்னுடைய அடுத்த ஹிந்திப் படம் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் ஷங்கர். ஏற்கெனவே, தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள புதிய படத்தை அவர் இயக்கப் போவதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளிவந்தது.

தமிழில் கமல்ஹாசன் நடிக்க அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் அவர் வேறு படங்களை இயக்கப் போவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்கக் கூடாது என 'இந்தியன் 2' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே, 'இந்தியன் 2' படம் தொடர்பாக அதன் கதாநாயகனாக கமல்ஹாசன் இதுவரையிலும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருவது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை அதிகரித்துள்ளது.

பொதுவாக, ஒரு பட உருவாக்கத்தின் போது தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பிரச்சினை உருவானால் அதன் கதாநாயகன் சமரசம் செய்து வைப்பார். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் பிரச்சினை என்றால் இயக்குனர் சமரசம் செய்வதும், இயக்குனருக்கும், நடிகருக்கும் பிரச்சினை என்றால் தயாரிப்பாளர் சமரசம் செய்வதும் வழக்கம்தான்.

ஆனால், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'இந்தியன் 2' படத்திற்காக செலவு செய்துள்ள தயாரிப்பாளருக்கு ஆதரவாகவோ, அல்லது எதன் காரணமாக இந்தப் படத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் தயங்குகிறார் என்பது குறித்து அவரிடமோ கமல்ஹாசன் என்ன பேசியிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த வருடம் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விபத்து நடந்து மூவர் உயிரிழந்த விவகாரத்திற்குப் பிறகு தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோரிடையே சுமூக உறவு இல்லை என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கெனவே, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை ஆரம்பித்து அமெரிக்காவில் அதன் படப்பிடிப்பை ஒரு கட்டம் நடத்தி பின் தனது முட்டி ஆபரேஷனைக் காரணம் காட்டி படத்தையே அப்படியே நிறுத்திவிட்டார் கமல்ஹாசன். அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் 'இந்தியன் 2'.

இவற்றோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் அதற்கு முன்பே அறிவித்த 'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தையும் தயாரிக்கப் போவதாக லைகா அறிவித்தது.

ஒட்டு மொத்தமாக லைகா தயாரிப்பில் கமல்ஹசான் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட “சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான்” ஆகிய மூன்று படங்களுமே திண்டாட்டத்தில் இருக்கின்றன. தான் சம்பந்தப்பட்ட படங்கள் இப்படி இருப்பது குறித்து கமல்ஹாசன் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறாரா என திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.

லைகா நிறுவனம் பல சர்ச்சைகளுக்கு நடுவில்தான் தமிழ்த் திரையுலகத்தில் படங்களைத் தயாரிக்க முன் வந்தது. நல்ல கதைகளின் பக்கம் போகாமல் டாப் ஹீரோக்களின் பின்னால் போனதால் தான் அந்த நிறுவனம் இப்படி ஒரு நிலையை சந்தித்துள்ளதாக அனுபவம் வாய்ந்த திரையுலகினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதுநாள் வரை தேர்தல், பிரச்சாரம் என பிஸியாக இருந்தார் கமல்ஹாசன். தற்போது சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்டது. இனியாவது தன்னை நம்பி பல கோடி ரூபாய் முதலீட்டைச் செய்த தயாரிப்பு நிறுவனத்தை எந்த ஈகோவும் பார்க்காமல் கமல்ஹாசன் மீட்டுத் தருவாரா என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவான அஸ்வின் - உடன் புகழும் நடிக்கிறார்ஹீரோவான அஸ்வின் - உடன் புகழும் ... டிவி - 'மாஸ்டர்' படத்திற்கு 'டப்' கொடுத்த 'குக் வித் கோமாளி' டிவி - 'மாஸ்டர்' படத்திற்கு 'டப்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SUNDARASIVAM S - baghram,இந்தியா
16 ஏப், 2021 - 09:36 Report Abuse
SUNDARASIVAM S விளம்பரம் தெரிவிக்கிறார்கள் ,
Rate this:
Muthu - Nagaipattinam,இந்தியா
16 ஏப், 2021 - 08:24 Report Abuse
Muthu இவர் இந்தியாவிற்கு எதிராணா ஆள். இங்கு தேவையே இல்லாத கிறிஸ்துவர் போன்ற ஒரு மதத்தை பரப்ப வந்த ஒரு ஆள். வெளிநாட்டு சக்திகளை நம்பி அங்கு ஓடிப்போவேன் என நம்மை மிரட்டும் ஒரு ஆள். தான் ஒரு அதி மேதாவி என நினைத்து தயாரிப்பாளர் லைகாவிடம் அசிங்கமாக பேசி வாங்கி கட்டிக்கொண்ட ஒரு ஆள். லைகா தயாரிப்பு நிறுவனம் சரியாக இந்த கமலை தோலுரித்து உலகுக்கு காட்டியதில் இந்த கமல் மிரண்டு போனார் என்பது உலகம் அறிந்த உண்மை. இவர் காலம் முடிந்தது. இன்னொரு ராகுல் என மக்கள் நினைக்கும் அளவிற்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியிடம் பல்பு வாங்கியவர். எனவே இவரை கணக்கில் சேர்க்க வேண்டாம்.
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
15 ஏப், 2021 - 21:13 Report Abuse
vira இது வரைக்கும் ஹீரோ லைக்கா கொடுத்த சம்பளத்திலே கோடி வட்டி பாத்திருப்பாரு என்ன ஷங்கர் தான் பாவம் காசு இல்லாம நாடு ரோட்டில் நிக்கறாரா குடும்பத்தோட ...
Rate this:
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
15 ஏப், 2021 - 19:15 Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN இவர் மக்கள் பணிக்காக வந்தவுடன் 300 கோடி இழப்பு ஏற்பட்டதாக தானே தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார். அதை யாராவது சரி செய்து கொடுத்து உள்ளீர்களா? இல்லையே. பின் ஏன் இவர் போய் அவர்களுக்கு இவர் உதவி செய்ய வேண்டும்.?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in