ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பண்டிகை நாட்களில் அனைத்து டிவிக்களுமே புதிய படங்களை ஒளிபரப்பு ரசிகர்களை கவரப் பார்ப்பார்கள். அந்த விதத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரு முன்னணி டிவியில் திரைக்கு வந்து மூன்று மாதங்களே ஆன 'மாஸ்டர்' படத்தை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.
அதே சமயம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடைசி கட்டத்தில் இருந்தது. மதியம் 2 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி இரவு 8 மணி வரை சென்றது. 'மாஸ்டர்' படம் ஆரம்பமான நேரத்தில் விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி'யில் சிறப்பு விருந்தினராக சிலம்பரசன் வந்த நேரம் அது. ஆச்சரியப்படும் விதத்தில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரைப் பற்றியும் பேசி அவர்களைப் பாராட்டினார் சிம்பு.
டிவி பார்க்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நேற்று இறுதிப் போட்டி என்பதால் பலரும் அதைப் பார்க்காமல் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். மேலும், படம் தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடியில் வேறு வெளிவந்ததால் பலரும் ஓடிடி தளத்திலேயே பார்த்திருப்பார்கள். எனவே, அவர்கள் படத்தைப் பார்க்காமல் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம்.
டிவி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங்கைப் பெற்ற படங்களில் முதலிடத்தில் இருக்கும் 'விஸ்வாசம்' படத்தை 'மாஸ்டர்' படம் முறியடிக்குமா என நேற்று காலையில் கூட நாம் செய்தி வெளியிட்டோம். இருந்தாலும் 'மாஸ்டர்' படத்திற்கு நேற்று 'குக் வித் கோமாளி' சரியான 'டப்' கொடுத்துள்ளது. அதை மீறி 'மாஸ்டர்' டிவி ரேட்டிங்கில் சாதனை படைத்திருக்குமா என்பதை ஒரு வாரம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.