ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார். விஜய்யின் 65வது படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி. தற்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்', ராம்சரண் ஜோடியாக 'ஆச்சார்யா', விஜய் ஜோடியாக தமிழில் என டாப் படங்களின் ஹீரோயினாக இருக்கிறார்.
அடுத்து அவரை தெலுங்கு, தமிழில் மேலும் புதிய படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம். அதனால், தன்னுடைய சம்பளத்தை இன்னும் கூடுதலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்க உள்ள படத்திற்காக அவரை அணுகிய போது பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் கேட்டாராம். அதற்கு அவர்களும் சம்மதித்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் மிக வேகமாக பூஜா ஹெக்டேதான் முன்னேறி வருகிறார் என்கிறார்கள்.