காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? |

தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார். விஜய்யின் 65வது படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி. தற்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்', ராம்சரண் ஜோடியாக 'ஆச்சார்யா', விஜய் ஜோடியாக தமிழில் என டாப் படங்களின் ஹீரோயினாக இருக்கிறார்.
அடுத்து அவரை தெலுங்கு, தமிழில் மேலும் புதிய படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம். அதனால், தன்னுடைய சம்பளத்தை இன்னும் கூடுதலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்க உள்ள படத்திற்காக அவரை அணுகிய போது பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் கேட்டாராம். அதற்கு அவர்களும் சம்மதித்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் மிக வேகமாக பூஜா ஹெக்டேதான் முன்னேறி வருகிறார் என்கிறார்கள்.