‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார். விஜய்யின் 65வது படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி. தற்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்', ராம்சரண் ஜோடியாக 'ஆச்சார்யா', விஜய் ஜோடியாக தமிழில் என டாப் படங்களின் ஹீரோயினாக இருக்கிறார்.
அடுத்து அவரை தெலுங்கு, தமிழில் மேலும் புதிய படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம். அதனால், தன்னுடைய சம்பளத்தை இன்னும் கூடுதலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்க உள்ள படத்திற்காக அவரை அணுகிய போது பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் கேட்டாராம். அதற்கு அவர்களும் சம்மதித்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் மிக வேகமாக பூஜா ஹெக்டேதான் முன்னேறி வருகிறார் என்கிறார்கள்.