2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'வைல்டு டாக்' என்கிற படம் இன்று(ஏப்., 2) வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்தனை வருடங்கள் சினி பீல்டில் இருந்தாலும் இப்போதும் அவருக்கு முதல் படம் ரிலீசாவது போலவே பதட்டம் ஏற்பட்டு விடுகிறதாம்.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் நாகார்ஜுனா.. அவருக்கு விதவிதமான உணவு வகைகளை தன் கையாலேயே சமைத்து சாப்பிட வைத்த சிரஞ்சீவி, கலகலப்பாக பேசி நாகார்ஜுனாவின் டென்சனை போக்கி, அவரை கூல் பண்ணி அனுப்பி வைத்துள்ளார். சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து, அவர் மனைவி சுரேகா தங்கள் இருவரையும் இணைத்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜுனா.