தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா தாக்கம் ஆரம்பமான சில மாதங்களில் நடிகர் பஹத் பாசில் மட்டும் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒன்றிணைந்து மொபைல் போனிலேயே முழுக்க முழுக்க 'சீ யூ சூன்' என்கிற படத்தை தயாரித்து, நடித்து அதை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல வசூலும் பார்த்துவிட்டார்.
அதையடுத்து கொரோனா தாக்கம் நீங்கியிராத நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே மீண்டும் 'இருள்' என்கிற படத்தின் படப்பிடிப்பையும் கேரளாவில் வாகாமன் பகுதியில் துவங்கியவர், இதோ இன்று அந்தப்படத்தை ரிலீஸும் செய்துவிட்டார்.. வழக்கம்போல இதுவும் ஒடிடி (நெட்பிளிக்ஸ்) தளத்தில் தான் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு ஆச்சர்யமாக மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற ஹிட் படம் மூலமாக சரிந்துகிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இயக்குனர் திலீஷ் போத்தனுடன் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள 'ஜோஜி' படத்தையும் முடித்து இன்று அதன் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தபடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்து (ஏப்-7) ரிலீசாகிறது. இதையும் ஒடிடி (அமேசான் பிரைம்) தளத்திலேயே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது கேரளாவில் மலையாள படங்கள் தியேட்டர்களிலேயே வெளியாகி வரும் சூழலில், பஹத் பாசிலுக்கு மட்டும் தியேட்டர் பக்கமே வர விருப்பம் இல்லை போல தெரிகிறது.