சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து தேசிய விருது பெற்றுள்ளார் டி.இமான். மீண்டும் அதே சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார் இமான். இந்த நிலையில், தேசிய விருது பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் டி.இமான் கூறுகையில், இந்தமுறைதான் முதன்முதலாக தேசிய விருது அறிவிப்பை நான் லைவ்வாக பார்த்தேன். அப்போது என் பெயரை அறிவித்தபோது என்னையுமறியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தேன். விருது அறிவிக்கப்பட்ட பிறகு ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலர் வாழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும் இந்த அறிவிப்பு வெளியான பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் நான் இசையமைத்த பாடலுக்கு ரஜினி சார் நடனமாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். முன்னதாக, அந்த பாடலுக்கு தான் நடனமாடுவதற்கு முன்பு எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை மைக்கில் அறிவித்திருக்கிறார் ரஜினி சார். அதைக்கேட்டு அனைவரையும் கைதட்டி பாராட்டியிருக்கிறார்கள். நான் சற்று தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். நான் சென்றபோது ஸ்பெசலாக கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்று தெரிவித்துள்ள டி.இமான், ரஜினியின் படையப்பா படத்தின் சிங்கநடை போட்டு என்ற ஓப்பனிங் பாடலை தியேட்டரில் பார்த்து ரசித்தவன் நான். இப்போது நானே ரஜினிக்கு அண்ணாத்த படத்தில் ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அப்படி நான் ரஜினிக்காக கம்போஸ் செய்த பாடலை மறைந்த எஸ்.பி.பி. அவர்கள் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் திரையில் வர இருப்பதை நினைக்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் டி.இமான்.