இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கார்த்தி - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், ‛‛கொரோனா லாக்டவுன் காரணமாக சுல்தான் படத்தை ஓடிடி தளத்தில்தான் வெளியிட முடிவு செய்து வந்தோம். அந்த சமயத்தில் தான் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.
அதன்பிறகுதான் சுல்தான் படத்தை தியேட்டரில் வெளியிட்டாலும் மாஸ்டர் படத்தைப்போலவே வசூவலிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மாற்றிக்கொண்டோம். அந்த வகையில் சுல்தான் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்கிற உறுதியை எங்களுக்கு ஏற்படுத்தியதே விஜய்யின் மாஸ்டர் படம்தான் என்றார் எஸ்.ஆர்.பிரபு.