‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கார்த்தி - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், ‛‛கொரோனா லாக்டவுன் காரணமாக சுல்தான் படத்தை ஓடிடி தளத்தில்தான் வெளியிட முடிவு செய்து வந்தோம். அந்த சமயத்தில் தான் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.
அதன்பிறகுதான் சுல்தான் படத்தை தியேட்டரில் வெளியிட்டாலும் மாஸ்டர் படத்தைப்போலவே வசூவலிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மாற்றிக்கொண்டோம். அந்த வகையில் சுல்தான் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்கிற உறுதியை எங்களுக்கு ஏற்படுத்தியதே விஜய்யின் மாஸ்டர் படம்தான் என்றார் எஸ்.ஆர்.பிரபு.




