இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகரான நாகார்ஜூனா, தற்போது பிரவீன் சத்தாரு இயக்கும் தனது 97ஆவது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதையடுத்து 98ஆவது படத்தையும் இந்த ஆண்டிற்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 99ஆவது படத்தில் நடிப்பவர் அதை முடித்ததும் தனது 100ஆவது படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து லூசிபர் ரீமேக் படத்தை இயக்கவிருக்கும் மோகன்ராஜா இயக்குகிறார். ஏற்கனவே மனம் என்ற படத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகனான நாகார்ஜூனா, பேரன்களான நாகசைதன்யா ஆகியோர் நடித்தது போன்று இப்படமும் ஒரு மல்டி ஸ்டார் கதையில் உருவாகிறது.
அப்பா - மகன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜூனாவும், அகிலும் நடிக்க, நாகசைதன்யா இன்னொரு வேடத்தில் நடிக்கிறாராம். குறிப்பாக, மனம் படத்தில் நாகசைதன்யா படம் முழுக்க வந்தது போன்று இப்படத்தில் அகில் நடிக்கிறாராம். இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து, நடிக்கப் போகிறார் நாகார்ஜூனா.