மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகரான நாகார்ஜூனா, தற்போது பிரவீன் சத்தாரு இயக்கும் தனது 97ஆவது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதையடுத்து 98ஆவது படத்தையும் இந்த ஆண்டிற்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 99ஆவது படத்தில் நடிப்பவர் அதை முடித்ததும் தனது 100ஆவது படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து லூசிபர் ரீமேக் படத்தை இயக்கவிருக்கும் மோகன்ராஜா இயக்குகிறார். ஏற்கனவே மனம் என்ற படத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகனான நாகார்ஜூனா, பேரன்களான நாகசைதன்யா ஆகியோர் நடித்தது போன்று இப்படமும் ஒரு மல்டி ஸ்டார் கதையில் உருவாகிறது.
அப்பா - மகன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜூனாவும், அகிலும் நடிக்க, நாகசைதன்யா இன்னொரு வேடத்தில் நடிக்கிறாராம். குறிப்பாக, மனம் படத்தில் நாகசைதன்யா படம் முழுக்க வந்தது போன்று இப்படத்தில் அகில் நடிக்கிறாராம். இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து, நடிக்கப் போகிறார் நாகார்ஜூனா.