ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரின் சம்பளத்தை அவர் கடந்துவிட்டார். 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து 2023ம் ஆண்டில் 'சலார்' படத்தை இயக்கி வரும் 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளாராம்.
சில வருடங்களுக்கு முன்பே பெரிய தொகை ஒன்றை அவர் பிரபாஸிடம் அட்வான்ஸாக கொடுத்திருந்தாராம். சரியான இயக்குனர் கிடைக்காத காரணத்தால் அப்படம் தள்ளிக் கொண்டே வந்ததாம். இப்போது பிரஷாந்த் நீல் தான் சரியான இயக்குனர் என பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அந்தப் படமும் மற்ற படங்களைப் போல 'பான் இந்தியா' படமாகத்தான் உருவாகப் போகிறதாம்.