'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகை புதிய இளமைப் புயல் ஒன்று அடுத்த மாதம் தாக்க வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாக உள்ள ராஷ்மிகா மந்தானா தான் அந்தப் புயல்.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனது துறுதுறு நடிப்பால் எண்ணற்ற இளம் ரசிகர்களைப் பெற்றவர் ராஷ்மிகா. இன்று சென்னையில் நடைபெற்ற 'சுல்தான்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தட்டுத் தடுமாறி தமிழில் பேசினார். அவர் பேசுவது புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன அவர் பேசும் போது சிரிப்பதையே ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்ல, வந்ததிலிருந்து கிளம்பும் வரை துறுதுறுவென அவர் இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நஸ்ரியா நசீம் வந்தார். சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.
அவரது வரிசையில் வர உள்ள ராஷ்மிகா இன்று பேசும் போது, தயாரிப்பாளர் பிரபுவிடம் அடுத்த படமும் சைன் பண்ண ரெடி என இப்போதே அவரது தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தமிழ் மக்களை காதலிக்கிறேன். சுல்தான் படம் புதிய அனுபவமாக இருந்தது என்றார்.
சீக்கிரமே ராஷ்மிகாவின் அடுத்த தமிழ்ப் பட அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.