தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வருட காலமாக கட்டுப்படுத்த முடியாமல் மக்களைத் திண்டாட வைத்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் நவம்பர் மாதம் திறக்கப்பட்ட போது குறைவான மக்கள் வருகையால் திண்டாடியது.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கைகளில் வசூலைக் குவித்தது. அதன்பின் மீண்டும் மக்கள் வருகை குறையவே தியேட்டர்காரர்கள் திண்டாடினர். வாரத்திற்கு வாரம் படங்கள் வெளிவந்தாலும் மக்கள் வராத காரணத்தால் அடிக்கடி காட்சிகளை ரத்து செய்யும் நிலை எற்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் வெளிவந்தது. நேற்று தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
'கர்ணன்' படம் நேற்று வெளிவந்தாலும் கடந்த வாரம் வெளியான 'சுல்தான்' படம் இந்த வாரத்திலும் தியேட்டர்களில் தொடர்கிறது. இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் தாக்கம் எப்படியிருக்கப் போகிறது என்பது இனிமேல் தான் தெரியும். இருந்தாலும் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் தப்பித்துவிடும் என்கிறார்கள்.