அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

ஒரு புதிய படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் வெளிவந்து அந்தப் படத்தின் வருவாயைக் கெடுத்து வருகிறது. காலம் காலமாக நடந்து வரும் இந்தத் திருட்டிற்கு இதுவரை எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை.
டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற பைரசி லின்க்குகள் கொட்டிக் கிடக்கின்றன. கார்த்தி, ராஷ்மிகா நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த 'சுல்தான்' படத்தின் பைரசி லின்க்கை அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் டுவிட்டரில் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் ஒருவர். அதில், “சுல்தான்' படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
தன் பக்கத்தின் கமெண்ட்டிலேயே இப்படி ஒரு பதிவு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு தயாரிப்பாளரின் பக்கத்திலேயே பைரசி லின்க்கைப் பதிவிடும் அளவிற்கு பைரசி திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது திரையுலகினருக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.