ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிம்பு, பிரபுதேவா என சிலரது அன்புக்குரியவராக திகழ்ந்த நயன்தாரா, சமீபகாலமாக அவர்களிடம் எந்தவித கனெக்சனும் இல்லாமல் சுதந்திர பறவையாகி இருக்கிறார். இந்நிலையில், புதிதாக ஆர்யா என்ற ப்ளேபாய் நடிகர் நயன்தாராவின் அடுத்த அன்புக்குரியவராகியிருக்கிறார். எங்காவது நயன்தாராவுக்கு ஒரு சிறு பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து குரல் கொடுக்கும் முதல் நபராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், தான் நடிக்கும் ராஜா ராணி படத்தில் நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கியிருக்கும் ஆர்யா, அவரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். ஆனால் அவர் கண்ணில் மண்ணை தூவும் வகையில், சமீபததில் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது, கூட்ட நெரிசலை சாதகமாக்கிய ஒரு ரசிகர் நயன்தாரா உடம்பில் தொடக்கூடாத இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறார். இதனால் அந்த அதிர்ச்சியில் அவர் அலறித் துடித்திருக்கிறார். இது ஆர்யாவின் காதில் விழ, கொந்தளித்து விட்டாராம். அதுவரை ஹீரோவாக இருந்த அவர் திடீரென்று வில்லனாகி அந்த ரசிகரை அடிக்க பாய்ந்திருக்கிறார். அதற்குள் மொத்த யூனிட்டும் சேர்ந்து அந்த நபரை கும்மியெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த சம்பவத்துக்குப்பிறகு அன்று முழுக்க ஸ்பாட்டில் அடங்காத கோபத்தில் இருந்தாராம் ஆர்யா.