நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மகாகவி காளிதாஸ் எழுதிய சகுந்தலம் காவியம் தெலுங்கில் சினிமாவாகிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்குகிறார். சகுந்தலையாக சமந்தாவும், அவரது காதலன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கிறார்கள். நேற்று இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட சமந்தா, நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நிறைய படங்களில் நடித்து விட்டேன். கமர்ஷியல் படம் முதல் த்ரில்லர் படம் வரை நடித்து விட்டேன். அவைகள் எனக்கு எளிதாக இருந்தது. காரணம் அதற்கு பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால் சகுந்தலை அப்படி அல்ல. இளவரசியாக நடிக்க போகிறேன் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை மறுபுறம் இருக்கிறது. நிறைய நகைகள் அணிந்து பளபள உடைகள் அணிந்து சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சகுந்தலம் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. என்றார்.