மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மகாகவி காளிதாஸ் எழுதிய சகுந்தலம் காவியம் தெலுங்கில் சினிமாவாகிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்குகிறார். சகுந்தலையாக சமந்தாவும், அவரது காதலன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கிறார்கள். நேற்று இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட சமந்தா, நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நிறைய படங்களில் நடித்து விட்டேன். கமர்ஷியல் படம் முதல் த்ரில்லர் படம் வரை நடித்து விட்டேன். அவைகள் எனக்கு எளிதாக இருந்தது. காரணம் அதற்கு பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால் சகுந்தலை அப்படி அல்ல. இளவரசியாக நடிக்க போகிறேன் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை மறுபுறம் இருக்கிறது. நிறைய நகைகள் அணிந்து பளபள உடைகள் அணிந்து சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சகுந்தலம் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. என்றார்.