‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஆஸ்திரேலியாவில் பிறந்த வளர்ந்த ஹரியானா பொண்ணு ஆஷிமா நெர்வால். தெலுங்கு படங்களில் அறிமுகமாகி கொலைகாரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது தமிழில் ராஜபீமாவில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி படமான பிட்டகதலுவில் பிங்கி என்ற கதையில் ஆஷிமாவின் நடிப்பு ஆந்திராவில் பரவலாக பேசப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆஷிமா.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால் என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்னா, ஈஷா ரெப்பா, ஸ்ரீனிவாஸ் அவரசலா ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்ததாகும்.
உலகம் முழுக்க 190 நாடுகளில், மிகப்பெரும் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள், எனது நடிப்பினை கண்டுகளித்தது ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். நிறைய நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வர ஆரம்பித்துள்ளது. திரை வாழ்வில் எப்போதும் தனித்துவமிக்க கதைகள் மற்றும் சவாலான பாத்திரங்கள் செய்யவே ஆசைப்படுகிறேன். இனிவரும் காலங்களிலும் ரசிகர்கள் பாராட்டும் வகையிலான படங்களை கதாப்பாத்திரங்களை தொடர்ந்து செய்வேன். என்றார்.