துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
ஆஸ்திரேலியாவில் பிறந்த வளர்ந்த ஹரியானா பொண்ணு ஆஷிமா நெர்வால். தெலுங்கு படங்களில் அறிமுகமாகி கொலைகாரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது தமிழில் ராஜபீமாவில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி படமான பிட்டகதலுவில் பிங்கி என்ற கதையில் ஆஷிமாவின் நடிப்பு ஆந்திராவில் பரவலாக பேசப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆஷிமா.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால் என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்னா, ஈஷா ரெப்பா, ஸ்ரீனிவாஸ் அவரசலா ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்ததாகும்.
உலகம் முழுக்க 190 நாடுகளில், மிகப்பெரும் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள், எனது நடிப்பினை கண்டுகளித்தது ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். நிறைய நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வர ஆரம்பித்துள்ளது. திரை வாழ்வில் எப்போதும் தனித்துவமிக்க கதைகள் மற்றும் சவாலான பாத்திரங்கள் செய்யவே ஆசைப்படுகிறேன். இனிவரும் காலங்களிலும் ரசிகர்கள் பாராட்டும் வகையிலான படங்களை கதாப்பாத்திரங்களை தொடர்ந்து செய்வேன். என்றார்.