மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ்த திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருடன் பணி புரியாத பல திரைக்கலைஞர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.
ஆனால், அவருடைய 'லாபம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே, தமிழ் சினிமா நடிகைகள் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிந்த திரைக்கலைஞர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் கூட எந்தவிதமான ஆறுதல் பதிவையும் பதிவிட மாட்டார்கள்.
சில சமயங்களில் சினிமாவில் கோலோச்சிய மூத்த கலைஞர்கள் மறைந்தால் கூட ஒரு இரங்கல் பதிவையும் பதிவிட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.
'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். ஒருவேளை அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக பதிவிடாமல் இருக்கிறார் போலிருக்கிறது.