டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழ்த திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருடன் பணி புரியாத பல திரைக்கலைஞர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.
ஆனால், அவருடைய 'லாபம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே, தமிழ் சினிமா நடிகைகள் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிந்த திரைக்கலைஞர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் கூட எந்தவிதமான ஆறுதல் பதிவையும் பதிவிட மாட்டார்கள்.
சில சமயங்களில் சினிமாவில் கோலோச்சிய மூத்த கலைஞர்கள் மறைந்தால் கூட ஒரு இரங்கல் பதிவையும் பதிவிட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.
'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். ஒருவேளை அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக பதிவிடாமல் இருக்கிறார் போலிருக்கிறது.