‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
கடந்த 2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது இந்து வி.எஸ் என்பவர் டைரக்சனில் உருவாகும் 19(1)(a) என்கிற இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் முதன்முறையாக விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த, அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அதனால், படப்பிடிப்பில் பேசி நடித்தது போல, டப்பிங்கிலும் தமிழ், மலையாளம் இரண்டையும் தனது சொந்த குரலிலேயே பேசுகிறாராம்.