ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது இந்து வி.எஸ் என்பவர் டைரக்சனில் உருவாகும் 19(1)(a) என்கிற இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் முதன்முறையாக விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த, அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அதனால், படப்பிடிப்பில் பேசி நடித்தது போல, டப்பிங்கிலும் தமிழ், மலையாளம் இரண்டையும் தனது சொந்த குரலிலேயே பேசுகிறாராம்.