இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த 2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது இந்து வி.எஸ் என்பவர் டைரக்சனில் உருவாகும் 19(1)(a) என்கிற இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் முதன்முறையாக விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த, அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அதனால், படப்பிடிப்பில் பேசி நடித்தது போல, டப்பிங்கிலும் தமிழ், மலையாளம் இரண்டையும் தனது சொந்த குரலிலேயே பேசுகிறாராம்.