துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
'முதன்முதலாக' என்று சொல்லக்கூடிய பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் நடிகை பார்வதி.. ஆம்.. மலையாளத்தில் மம்முட்டியுடன் முதன்முறையாக 'புழு' என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் பார்வதி. அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை துல்கர் சல்மான் ரிலீஸ் செய்கிறார். இது மலையாள திரையுலகை பொறுத்தவரை உண்மையிலேயே ஆச்சர்யமான செய்தி தான்.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' என்கிற படத்தில், பெண்களை மம்முட்டி இழிவுபடுத்தியுள்ளதாக பார்வதி கூறினார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியதுடன் அப்படியே பார்வதிக்கு எதிராக திரும்பி, அதனால் கொஞ்ச காலம் படவாய்ப்புகளே கிடைக்காமல் சிரமப்பட்டார் பார்வதி.
அதன்பிறகு ஒரு பேட்டியில், “மம்முட்டியை பற்றியும் அவருடைய படத்தை பற்றியும் விமர்சிக்கவில்லை. நான் பொதுவாக பேசியதை, சிலர் மம்முட்டிக்கு எதிராக பேசியதாக கூறி திரித்து விட்டார்கள்” என விளக்கமும் அளித்தார் பார்வதி. அதன்பின் நிலைமை ஒரளவு சீராகி, பட வாய்ப்புகள் மீண்டும் பார்வதியை தேடி வரத்தொடங்கின. இதோ இப்போது மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நீண்டநாள் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.