ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை |

'முதன்முதலாக' என்று சொல்லக்கூடிய பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் நடிகை பார்வதி.. ஆம்.. மலையாளத்தில் மம்முட்டியுடன் முதன்முறையாக 'புழு' என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் பார்வதி. அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை துல்கர் சல்மான் ரிலீஸ் செய்கிறார். இது மலையாள திரையுலகை பொறுத்தவரை உண்மையிலேயே ஆச்சர்யமான செய்தி தான்.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' என்கிற படத்தில், பெண்களை மம்முட்டி இழிவுபடுத்தியுள்ளதாக பார்வதி கூறினார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியதுடன் அப்படியே பார்வதிக்கு எதிராக திரும்பி, அதனால் கொஞ்ச காலம் படவாய்ப்புகளே கிடைக்காமல் சிரமப்பட்டார் பார்வதி.
அதன்பிறகு ஒரு பேட்டியில், “மம்முட்டியை பற்றியும் அவருடைய படத்தை பற்றியும் விமர்சிக்கவில்லை. நான் பொதுவாக பேசியதை, சிலர் மம்முட்டிக்கு எதிராக பேசியதாக கூறி திரித்து விட்டார்கள்” என விளக்கமும் அளித்தார் பார்வதி. அதன்பின் நிலைமை ஒரளவு சீராகி, பட வாய்ப்புகள் மீண்டும் பார்வதியை தேடி வரத்தொடங்கின. இதோ இப்போது மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நீண்டநாள் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.