திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
வளர்ந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயர். தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ளராஜா, சீதக்காதி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்கத்தில் உருவாகும் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இப்படத்தில் தன் சகோதரியின் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறேன். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. மிக அழுத்தமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது உற்சாகமாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் பெண் கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய படம், நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இது வரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். என்கிறார் பார்வதி நாயர்.