நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

வளர்ந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயர். தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ளராஜா, சீதக்காதி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்கத்தில் உருவாகும் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இப்படத்தில் தன் சகோதரியின் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறேன். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. மிக அழுத்தமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது உற்சாகமாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் பெண் கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய படம், நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இது வரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். என்கிறார் பார்வதி நாயர்.