கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கி.பி.1809ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் அய்யா வைகுண்டர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அய்யா வைகுண்டர் பிற்காலத்தில் ஆன்மீக குருவாக மாறினார். அய்யாவழி என்ற பெயரில் அவரை பல லட்சம் மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வாழ்க்கை தற்போது சினிமா ஆகிறது. ஒரு குடைக்குள் என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை பொன் செல்வராஜ், விஷ்ணுவதி, உதயகுமார், சுனிதா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வைகுண்டர் வேடத்தில் ஆனந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருடன் மேக்னா ராஜ், மாஸ்டர் தினேஷ், நிரோஷா, கருத்தம்மா ராஜஸ்ரீ, இளவரசு நடிக்கிறார்கள். வி.ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவா இசை அமைக்கிறார். கே.எல். உதயகுமார் இயக்குகிறார்.
இதில் வைகுண்டரின் அவதாரம், அவர் பக்தர்களுக்கு அருளிய அற்புதங்கள், அவரது முழு வாழ்க்கை இடம் பெறுகிறது. கன்னியாகுமாரி மாவட்டத்தை சுற்றி படப்பிடிப்பு நடக்கிறது.