என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கடந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா தாக்கத்தால் இந்தப்படத்தின் ஓட்டம் தடைபட்டாலும் மறு ரிலீஸ் செய்தபோதும், ஓடிடியில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், இன்னொரு கதாநாயகியாகவும் பங்குபெற்ற நிரஞ்சனா அகத்தியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் தேசிங் பெரியசாமி. இந்தநிலையில் இந்தப்படம் வெற்றி பெற்றதற்காகவும், மணமக்களுக்கு திருமண பரிசாகவும் புதிய போர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்றை பரிசளித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்.