புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா தாக்கத்தால் இந்தப்படத்தின் ஓட்டம் தடைபட்டாலும் மறு ரிலீஸ் செய்தபோதும், ஓடிடியில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், இன்னொரு கதாநாயகியாகவும் பங்குபெற்ற நிரஞ்சனா அகத்தியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் தேசிங் பெரியசாமி. இந்தநிலையில் இந்தப்படம் வெற்றி பெற்றதற்காகவும், மணமக்களுக்கு திருமண பரிசாகவும் புதிய போர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்றை பரிசளித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்.