பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் அருவா, டாடா சுமோ ஆகியவற்றை அதிகம் காட்டிய இயக்குனர்களில் ஹரி முக்கியமானவர். விக்ரமிற்கு 'சாமி', சூர்யாவிற்கு 'சிங்கம்' என அவர்களுக்கு கமர்ஷியலாக மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தவர்.
அவரது மச்சானான அருண் விஜய் முன்னணிக்கு வந்த பிறகு அவரை வைத்து படம் இயக்குவீர்களா என பல முறை கேட்ட போதும் அதைத் தவிர்த்தே வந்தார். சூர்யாவுடன் இணைந்து புதிய படமொன்றை ஹரி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அந்தப் படத்தையே கைகழுவி விட்டார்கள்.
இதனால், நொந்து போன ஹரிக்கு உடனடியாக கை கொடுத்தார் மச்சான் அருண் விஜய். இருவரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு முன்னரே வெளிவந்தது. இன்று அப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளார்கள்.
விக்ரம், சூர்யா ஆகியோர் வேறு ஒரு தளத்தில் செல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரி, அது போலவே தனது மச்சான் அருண் விஜய்க்கும் ஒரு கமர்ஷியல் திருப்புமுனையைத் தருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.