தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

தமிழ் சினிமாவில் அருவா, டாடா சுமோ ஆகியவற்றை அதிகம் காட்டிய இயக்குனர்களில் ஹரி முக்கியமானவர். விக்ரமிற்கு 'சாமி', சூர்யாவிற்கு 'சிங்கம்' என அவர்களுக்கு கமர்ஷியலாக மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தவர்.
அவரது மச்சானான அருண் விஜய் முன்னணிக்கு வந்த பிறகு அவரை வைத்து படம் இயக்குவீர்களா என பல முறை கேட்ட போதும் அதைத் தவிர்த்தே வந்தார். சூர்யாவுடன் இணைந்து புதிய படமொன்றை ஹரி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அந்தப் படத்தையே கைகழுவி விட்டார்கள்.
இதனால், நொந்து போன ஹரிக்கு உடனடியாக கை கொடுத்தார் மச்சான் அருண் விஜய். இருவரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு முன்னரே வெளிவந்தது. இன்று அப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளார்கள்.
விக்ரம், சூர்யா ஆகியோர் வேறு ஒரு தளத்தில் செல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரி, அது போலவே தனது மச்சான் அருண் விஜய்க்கும் ஒரு கமர்ஷியல் திருப்புமுனையைத் தருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.