நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழ் சினிமாவில் அருவா, டாடா சுமோ ஆகியவற்றை அதிகம் காட்டிய இயக்குனர்களில் ஹரி முக்கியமானவர். விக்ரமிற்கு 'சாமி', சூர்யாவிற்கு 'சிங்கம்' என அவர்களுக்கு கமர்ஷியலாக மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தவர்.
அவரது மச்சானான அருண் விஜய் முன்னணிக்கு வந்த பிறகு அவரை வைத்து படம் இயக்குவீர்களா என பல முறை கேட்ட போதும் அதைத் தவிர்த்தே வந்தார். சூர்யாவுடன் இணைந்து புதிய படமொன்றை ஹரி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அந்தப் படத்தையே கைகழுவி விட்டார்கள்.
இதனால், நொந்து போன ஹரிக்கு உடனடியாக கை கொடுத்தார் மச்சான் அருண் விஜய். இருவரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு முன்னரே வெளிவந்தது. இன்று அப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளார்கள்.
விக்ரம், சூர்யா ஆகியோர் வேறு ஒரு தளத்தில் செல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரி, அது போலவே தனது மச்சான் அருண் விஜய்க்கும் ஒரு கமர்ஷியல் திருப்புமுனையைத் தருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.