இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் 'ஆதி புருஷ்'. ராமாயணத்தை மையமாகக் கொண்டு பல கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்க உள்ளனர்.
சீதா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், தற்போது அக்கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', மகேஷ் பாபுவுடன் 'சர்க்காரு வாரி பாட்டா', செல்வராகவனுடன் 'சாணி காயிதம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
சீதாவாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்குக் கிடைத்தால் அதன் மூலம் அவர் ஹிந்திக்குச் செல்லவும் வாய்ப்பாக அமையும். ஏற்கெனவே அஜய் தேவகன் நடிக்கும் 'மைதான்' படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், மிகவும் இளமையாக இருப்பதால் அக்கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று அப்படத்திலிருந்து விலகினார்.
'ஆதி புருஷ்' படத்தில் கீர்த்தி நடிப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்.