சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
சினிமா நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்களாகப் பலரும் இருப்போம். ஆனால், தீவிர ரசிகர், வெறித்தனமான ரசிகர் என சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் என்ன செய்வார்கள், தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் கட் அவுட் வைப்பார்கள், பாலாபிஷேகம் செய்வார்கள். சரி, நடிகர்களுக்கு அப்படிச் செய்துவிடலாம், நடிகைகளுக்கு என்ன செய்வது ?.
ஒரு வெறித்தனமான ரசிகர், செய்தது என்ன தெரியுமா ?. தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா நடித்த 'பொகரு' படம் சமீபத்தில் வெளிவந்தது. அதற்காக படத்தின் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த பேனரில் இருக்கும் ராஷ்மிகாவுக்கு அவரது தலையில் இரண்டு முழம் மல்லிகைப்பூ வைத்து பூச்சூடி மகிழ்ந்திருக்கிறார் ஒரு ரசிகர்.
அவர் அப்படிச் செய்த வீடியோவை ரசிகர் ஒருவர் பதிவிட்டு ராஷ்மிகாவுக்கும் டுவிட்டரில் டெக் செய்துள்ளார். அதற்கு ராஷ்மிகா 'ஹார்ட்டின்' எமோஜி போட்டு பதிலளித்திருக்கிறார். இப்படியான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமா, அதிர்ச்சியா ?.