என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள நடிகர் பஹத் பாசில் கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இயக்குனர்களால் மிகவும் தேடப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார்.. ஆனாலும் கதைகளை செலெக்ட்டிவாக தேர்ந்தெடுப்பதில் கவனம் காட்டி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவரை தேடி வந்த டாம் குரூஸ் நடிக்கும் ஹாலிவுட் பட வாய்ப்பு வந்தும் கூட அதை ஏற்க மறுத்துவிட்டார் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்து உள்ளார் பஹத் பாசில்.
“அந்த படத்தின் இயக்குனருடன் வீடியோ காலில் தான் பேசினேன். அவரை நான் பெரிதாக இம்ப்ரஸ் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக என்னுடைய ஆங்கில பேச்சு வழக்கு. இருந்தாலும் அவர் இந்த படத்திற்காக நான்கு மாதம் அமெரிக்காவில் வந்து தங்க வேண்டும், ஆனால் சம்பளம் கிடையாது என்று கூறினார். அவரது பேச்சில் இருந்தே அவர் தேடிக் கொண்டிருக்கும் ஆள் நான் இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது. நான் மறு யோசனை இன்றி இந்த படத்தில் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டேன். தவிர அந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு என்னால் அதில் எதையும் உணர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.