சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அடுத்த வாரம் முதல் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இன்று அறிவித்துவிட்டார்.
எனவே, தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கோடைக்கு முன்பாகவே கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் களைத்துப் போய் ஓய்வெடுப்பார். அதனால், தேர்தல் முடிந்து ஏப்ரல் மாதமும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அடுத்து மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதற்குப் பிறகு மட்டுமே அவரால் 'இந்தியன் 2, விக்ரம்' படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும். 'இந்தியன் 2' படப்பிடிப்பு கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் இயக்குனர் ஷங்கர் தெலுங்குப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு கமல்ஹாசன் முன்னுரிமை கொடுப்பார் என்பது தெரிய வரும்.