மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதோடு தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தியும் பயின்று வருகிறார்.
இந்நிலையில், அடுத்தபடியாக பாலிவுட் சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை யூகித்து விட்ட ராஷ்மிகா, இதுவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து வந்தவர் தற்போது மும்பையில் ஒரு ஆடம்பர பிளாட் விலைக்கு வாங்கியிருக்கிறார். இதேபோல்தான் இதற்கு முன்பும் ஐதராபாத்தில் ஓட்டலில் தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, பின்னர் அதேபகுதியில் ஒரு விலையுயர்ந்த வீடு வாங்கி குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.