புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதோடு தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தியும் பயின்று வருகிறார்.
இந்நிலையில், அடுத்தபடியாக பாலிவுட் சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை யூகித்து விட்ட ராஷ்மிகா, இதுவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து வந்தவர் தற்போது மும்பையில் ஒரு ஆடம்பர பிளாட் விலைக்கு வாங்கியிருக்கிறார். இதேபோல்தான் இதற்கு முன்பும் ஐதராபாத்தில் ஓட்டலில் தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, பின்னர் அதேபகுதியில் ஒரு விலையுயர்ந்த வீடு வாங்கி குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.