'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
2019-2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதுகளை வழங்கினார். 130 கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், முதல்வரிடம் கலைமாமணி விருதும் பெறும் புகைப்படம் மற்று அந்த விருதினை தனது தாயிடம் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.