பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2019-2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதுகளை வழங்கினார். 130 கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், முதல்வரிடம் கலைமாமணி விருதும் பெறும் புகைப்படம் மற்று அந்த விருதினை தனது தாயிடம் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.