25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகளுடன் வெளிவந்த இந்தப் படம் வட இந்திய மாநிலங்களைத் தவிர உலகம் முழுவதும், தென்னிந்தியாவிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
கொரோனா தொற்றால் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருந்த மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்ததில் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே முக்கிய பங்குண்டு. கடந்த ஜனவரி 29ம் தேதி ஒடிடி தளத்திலும் 'மாஸ்டர்' வெளியானது. இருப்பினும் பல ஊர்களில் தியேட்டர்களிலும் இன்னும் மக்கள் வந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாளையுடன் படம் வெளிவந்து 25 நாளாகப் போகிறது. இந்த 25 நாட்களில் படம் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
50 சதவீத இருக்கைகளிலேயே 250 கோடி ரூபாய் வசூல் என்பது சினிமா வியாபாரத்தில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் 300 கோடி ரூபாய் வசூலைக் கூடத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.