25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாகத் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதையே மாநில அரசுகளும் பின்பற்றின. இந்த மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதையடுத்து தென்னிந்தித் திரையுலகத்தில் உள்ள மற்ற மொழி திரையுலகினரும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கின. கேரளா அரசு பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றது-. தற்போது தெலங்கானா அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைத் தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து பலரும் தங்களது படங்களை வெளியிட ஆலோசித்து வருகின்றனர். கடந்த வருடங்களில் வெளிவராமல் முடங்கிப் போன பல படங்கள் அடுத்த சில மாதங்களில் தொடர்ச்சியாக வெளிவர உள்ளன.