இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது தான் இப்போதைய புதிய டிரண்ட். அந்த வரிசையில் அடுத்து வில்லனாக நடிக்க இருக்கிறார் விஷால். அதுவும் இங்கல்ல பாலிவுட்டில்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஹீரோயின், அர்ஜூன் வில்லன். பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். விஷால் ராணுவ வீரராகவும், அர்ஜூன் சைபர் க்ரைம் டானாகவும் நடித்திருந்தார். விஷால் கேரக்டருக்கு இணையாக அர்ஜூன் கேரக்டரும் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தின் கதையை மித்ரன் விஷாலிடம் சொன்னபோது அதில் வில்லன் கேரக்டரில் நடிக்கத்தான் விஷால் ஆசைப்பட்டார். ஆனால் மித்ரன் நீங்கதான் ஹீரோ என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் வில்லனாக நடிக்க அப்போது ஆர்யாவிடம் பேசப்பட்டது. அவர் மறுத்து விடவே அதன் பிறகு அர்ஜூன் நடித்தார்.
இப்போது இரும்புத்திரை இந்தியில் ரீமேக் ஆகிறது. விஷால் பிலிம் பேக்டரியும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று தெரிகிறது. இதில் விஷால் நடித்த கேரக்டரில் சல்மான்கானும், அர்ஜூன் நடித்த வில்லன் கேரக்டரில் விஷாலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. காரணம் சல்மான்கான் நடிக்கும் பட்சத்தில் அவர் படத்தின் வில்லனை அவர் தான் தேர்வு செய்வார். இந்தி பேசும் மக்களுக்கு அதிக அறிமுகம் இல்லாத விஷால் நடிக்க அவர் ஒப்புக் கொள்வரா என்று தெரியவில்லை.