'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் படம் அரண்மனை-3. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசிகண்ணா, சாக்ஷிஅகர்வால், விவேக், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இப்படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அரண்மனை-3 படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருப்பதோடு, அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் இருவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.