இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் படம் அரண்மனை-3. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசிகண்ணா, சாக்ஷிஅகர்வால், விவேக், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இப்படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அரண்மனை-3 படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருப்பதோடு, அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் இருவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.