பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், காதல் தோல்வியால் சில காலம் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது அதிலிருந்து மீண்டு, படங்களில் மீண்டும் பிஸியாகி உள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியானதில் இருந்து மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முக்கியமாக பிரபாசுடன் சலார் படத்தில் கமிட்டாகி உள்ளார் ஸ்ருதி.
இதுப்பற்றி ஸ்ருதி கூறுகையில், ''சில காலம் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் இல்லை என்றபோதும் கிராக் படத்திற்கு பிறகு லக்கி நடிகையாக மாறியிருக்கிறேன். பிரபாசுடன் கமிட்டாகியிருக்கும் சலார் படம் எனது சினிமா பயணத்தில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எனது கேரியரில் மிகவும் மகிழ்ச்சியான கட்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.