எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் ஹரி தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வருகிறார். சூர்யா நடிப்பில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 என வரிசையாக இயக்கினார். அதேபோல் விக்ரம் நடிப்பில் சாமி, சாமி-2 படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான போலீஸ் கதைகள் தான் என்றாலும், திரைக்கதையின் வேகத்தில் முந்தைய சாயல்களை வெளியில் தெரியாத அளவுக்கு செய்து விடுவார் ஹரி.
ஆனபோதும் சிங்கம் -3, சாமி -2 படங்கள் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை. அதையடுத்து அருவா படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறி வந்த ஹரி, பின்னர் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக சொன்னார். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே இல்லாமல் அவரது மைத்துனர் அருண் விஜய் அந்த படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அருவா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு ஹரி இயக்கிய சேவல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்படத்தில் இணைகிறார்.