தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் லாபம். விஜய்சேதுபதி இதனை தயாரித்து, நடிக்கிறார். அவருடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது விவசாய பிரச்சனையை அடிப்படையாக கொண்ட படம்.
கொரோனா காலத்திற்கு முன்பு 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருந்து. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து வந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிருஷ்ணகிரி பகுதியில் நடந்தது. அந்த பகுதியில் படப்பிடிப்பு நடப்பது அபூர்வம் என்பதால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதனால் சரியான கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதனால் ஸ்ருதிஹாசன் இல்லாத காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருக்கிறது. அதை முடித்தால்தான் படத்தை முடிக்க முடியும் என்கிறார்கள். மீண்டும் கிருஷ்ணகிரி சென்று படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை என்பதால் சென்னை புறநகர் ஒன்றில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் அவர் காட்சிகளை எடுத்து முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு நாளைக்கு இன்னும் ஸ்ருதி தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.