ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் லாபம். விஜய்சேதுபதி இதனை தயாரித்து, நடிக்கிறார். அவருடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது விவசாய பிரச்சனையை அடிப்படையாக கொண்ட படம்.
கொரோனா காலத்திற்கு முன்பு 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருந்து. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து வந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிருஷ்ணகிரி பகுதியில் நடந்தது. அந்த பகுதியில் படப்பிடிப்பு நடப்பது அபூர்வம் என்பதால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதனால் சரியான கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதனால் ஸ்ருதிஹாசன் இல்லாத காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருக்கிறது. அதை முடித்தால்தான் படத்தை முடிக்க முடியும் என்கிறார்கள். மீண்டும் கிருஷ்ணகிரி சென்று படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை என்பதால் சென்னை புறநகர் ஒன்றில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் அவர் காட்சிகளை எடுத்து முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு நாளைக்கு இன்னும் ஸ்ருதி தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.