ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆதிபகவன் படத்தை இரண்டு வருடங்களாக படமாக்கியதோடு, ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க வைத்து என்னை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் அமீர் என்று அவரை கடுமையாக விமர்சித்து வந்தார் ஜெயம்ரவி. அதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சில சமயங்களில் அமீரை கொலை செய்து விடலாம் போல் எனக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது என்றும் கூறினார்.
ஆனால் இப்போது படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெறுவதால் தனது பழைய கோபதாபத்தை தள்ளி வைத்து விட்டு அமீரையும், அந்த படத்தில் பணியர்றறிய அனுபவங்களையும் தான் இனிமையாக அசைபோட்டு வருவதாக மாற்றி பேசி வருகிறார் ஜெயம்ரவி.அதிலும், அந்த படத்தில் நடித்தது எனது ரேஞ்சையே மாற்றியிருக்கிறது. படப்பிடிப்பு நடந்தபோது என்னை அமீர் வருத்தி எடுப்பதாக வேதனைப்பட்டேன். ஆனால் இப்போது படத்தை பார்க்கும்போது ரொம்ப நிறைவாக இருக்கிறது. பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை உணர்கிறேன் என்று அமீரையும், ஆதிபகவன் படத்தையும் பக்கம் பக்கமாக புகழ்ந்து வருகிறார் ஜெயம்ரவி.