ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தவறுகளை தட்டிக்கேட்பதற்காக அரசியல்வாதி ஆகலாம் என நினைத்தாக டைரக்டர் முருகதாஸ் கூறினார். திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நான் இந்த கல்லூரியில்தான் படித்தேன். படிக்கும்போது மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். ஆனால் 3 ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றேன். நான் பார்த்த முதல் நகரம் திருச்சி. கல்லூரி படிப்பு காலத்தில் எனக்குள் இருந்த கூச்சம் எங்கே போனது என்று தெரியவில்லை. தவறுகளை தட்டிக்கேட்கும் மனநிலை எனக்குள் உருவானது. தவறுகளை எதிர்த்து எப்படி போராடுவது என்று தெரியாத நிலை. எனவே ஒரு நக்சலைட்டாகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ ஆகலாமா? என்று கூட நினைத்தேன்.
2-ம் உலகப்போரை நிறுத்தியது, அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன். எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்து வருகிறேன். எனது ரமணா படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். ஊதியத்துக்கு பணி செய்வதை மட்டுமே லட்சியமாக கொள்ளாமல் சமுதாய கடமைகளையும் ஆற்ற முன்வர வேண்டும், என்றார்.