ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற அதிரடி கமர்ஷியல் படங்களை இயக்கிய பேரரசு இயக்கிய திருத்தணி படத்தில் கமிட்டானபோது அந்த படம் தன்னை நல்லதொரு கமர்ஷியல் ஹீரோவாக்கும் என்பது பரத்தின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அந்த படமே அவரை அதளபாதாளத்தில் தள்ளி விட்டது. ஒரளவு இருந்த மார்க்கெட்டும் சரிந்து இப்போது இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார்.
இந்த நிலையிலும் சிக்கலில் கிடந்த திருத்தணி படத்தை வெளிக்கொண்டு வந்து தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி விட வேண்டும் என்ற முயற்சியிலும் திரைக்குப்பின்னால் தீவிரமாக இருக்கிறார் பரத். இதையடுத்து சசி இயக்கத்தில் நடித்து வரும் 555 படத்தை இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறார். பல வெற்றிப்படங்களை கொடுத்த சசியின் படம் என்பதால், இந்த இரண்டு படங்களில் ஒன்று தன்னை தக்க வைத்துக்கொள்ள உதவும் என்று எதிர்பார்த்திருக்கிறார்.
இந்தநிலையில், 2012ல் எப்படியேனும் பரத்துக்கு திருமணம் நடத்தி விட வேண்டும் என்று அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் அவரோ, இப்போது வேண்டாம். காதல் படம் மாதிரி இன்னொரு மெகா ஹிட் படம் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டாராம். இதனால் பரத்தை விட அவரது பெற்றோர்தான் மகனின் அடுத்த ஹிட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.