ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் அறிவுஜீவி நடிகைளில் ஒருவர் பார்வதி. எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் தனக்கு பிடிக்காத படத்தில் நடிக்க மாட்டார் என்பதும். அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அது தரமான படமாக இருக்கும் என்பதும் மலையாளத்தில் அவருக்கு இருக்கும் இமேஜ். அதற்கேற்பவே அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகும். அல்லது விருதுகளை குவிக்கும். தமிழில் பூ படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு சுமார் 15 பட வாய்ப்புகளை நிராகரித்தார். இப்போது தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வருடத்திற்கு இரு படங்களில் நடிப்பது மற்ற நேரங்களில் படிப்பது என்பதுதான் பார்வதியின் கொள்ளை இந்த ஆண்டு ஒரு தமிழ், ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார். தீவிரமாக கதை எழுதிவரும் பார்வதி விரைவில் ஒரு மலையாளப்படத்தை இயக்க இருக்கிறார்.