மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பாசில், சித்திக் போன்ற இயக்குனர்களிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றி, இப்போது, "செம்பட்டை என்ற படத்தில் இயக்குனராகி இருக்கிறார் ஐ.கணேஷ். விமல், விதார்த் ஆகியோருடன் இணைந்து கூத்துப்பட்டறையில், எட்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற திலீபன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், கவுரி நம்பியார் என்ற கேரள
புதுவரவு, நாயகியாக நடித்துள்ளார். இந்த கவுரி வேறு யாருமல்ல. "கோ பட நாயகி கார்த்திகாவின் பெரியப்பா மகள். அதாவது, கார்த்திகாவுக்கு அக்காள். "சினிமாவில் எனக்கு சீனியர் கார்த்திகா என்பதால், அவரிடமும், எனது சித்தியான, "அலைகள் ஓய்வதில்லை ராதாவிடமும் சினிமாவை கேட்டு தெரிந்து கொண்டே நடிக்க வந்துள்ளேன் என்கிறார் கவுரி. "இந்த, "செம்பட்டை படத்தில் உப்பு விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், காதல்,
சென்டிமென்ட் இரண்டும் கலந்த கதாபாத்திரம் என்பதால், கதையோடு கலந்து நடித்துள்ளேன். அதனால், இந்த படம் திரைக்கு வரும் போது, எனது நடிப்பு பேசப்படும் என்று சொல்லும் கவுரி நம்பியார், "எனது சித்தி ராதா சொன்னது போல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மதித்து நல்ல நடிகை என்ற பெயருடன் சினிமாவில்
நீடித்திருப்பேன் என்கிறார்.