மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடிகை தமன்னாவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
'கண்ணே கலைமானே' படத்தில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறேன். விவசாயத்தை காப்பாற்றும் ஒரு கேரக்டர். படம் முழுக்க வேட்டி-சட்டையில்தான் நடித்திருக்கிறேன். தமன்னா, கூட்டுறவு சங்க அதிகாரி. அவருக்கும் ஆர்கானிக் விவசாயிக்கும் இடையே இழையோடு மெல்லிய காதல் தான் கதை. படத்தின் ஒரு காட்சியில் நான் கிளிசரின் இன்றி அழுதிருக்கிறேன். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமிதான் காரணம். கிளிசரின் இன்றி எப்படி அழுவது என்ற கலையையும் அவர் கற்றுள்ளார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்து, அப்படம் வெற்றி அடைந்த பின், எனக்கு காமெடி கேரக்டர்கள் மட்டும்தான் சரிபட்டு வரும் என நினைத்தேன். ஆனால், மனிதன் படத்தில் கேரக்டர் ரோலில் நான் நடித்து, அது வெற்றியடைந்த பின் தான், எனக்கும் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க முடியும் என முடிவெடுத்தேன்.
அரசியலைப் பொறுத்த வரை எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதற்காக, போஸ்டர் அரசியலில் தான் நான் வளர வேண்டும் என்பதில்லை. எனக்காக போஸ்டர் அடித்து ஒட்டுபவர்கள் யாரிடமும் நான் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள் என கூறியதில்லை. ஆர்வம் மற்றும் அன்பு மிகுதியால், எனக்காக பலரும் போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர். ஒட்டிய போஸ்டர்களை என்னால் கிழித்தெறிய முடியாது.
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.




