ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசையமைப்பாளர் இளையராஜா, சேலத்தில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, தன் இளமைகாலம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். குறிப்பாக தான் எப்படி இசையமைக்க வந்தேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ஒரு பாடலை எத்தனை முறை கேட்டாலும் அன்றைக்கு தான் கேட்ட மாதிரி இருக்க வேண்டும். அது தான் நல்ல பாடலாக இருக்கும். நேற்று இருந்த மாணர்வகள் இன்று இல்லை, ஆற்றில் தண்ணீர் போல் புதிய நீரோட்டமாக இருக்க வேண்டும். நான் இசையமைத்த படங்கள் 1000 தாண்டி சென்றுவிட்டது. அதற்கு கணக்கே இல்லை.
பெரியகுளத்தில் இருந்து வைகை அணைக்கே பயணித்ததே எனது முதல் பேருந்து பயணம். அங்கு, நான் சம்பாதித்த ரூ.7 பணம் கொடுத்த மகிழ்ச்சி, இவ்வளவு காலம் சம்பாதித்த பணத்தில் கிடைக்கவில்லை.இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காமல் சொந்தமாக சிந்தனை கொண்டிருக்க வேண்டும்.
பறையிசை, வில்லுப்பாடல் உள்ளிட்ட பாரம்பரிய இசையை பாதுகாக்க வேண்டும் எனில், தொழில் நுட்பம் பெயரில் உருவாக்கப்படும் இசையை கேட்பதை நிறுத்த வேண்டும்.
இவற்றை விரும்பி கேட்பதால் தான், பாரம்பரிய இசைகள் அழிந்து வருகின்றன.
பாரம்பரிய இசை கலைஞர்கள், அடுத்த தலைமுறையினருக்கு, அதை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான், அதை அழிவிலிருந்து காக்க முடியும்.
யார் முன்னால், மனம் அமைதியாகிறதோ, அவர்தான் குரு. நான் தினமும், பாரதியாரை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவரை நினைத்தாலே இசை கசிந்து ஓடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.