ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு அவரது நெருங்கிய உறவினரான அனிருத் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'பேட்ட'. பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தங்களது பங்கு ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பெரிய பில்ட்அப் கொடுப்பார்கள். அதையெல்லாம் மிஞ்சம் வகையில் அனிருத் கொடுத்த பிலட்-அப் தான் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து காரசாரமான விவாதமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கே உரிய குத்துப் பாடலாக அமைந்த 'மரண மாஸ்' என்ற பேட்ட படத்தின் சிங்கிள் பாடலை நேற்று வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பறையிசையைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் அனிருத். அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு வீடியோ ஒன்றை நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இந்த உலகத்திலேயே இப்படி நடந்திருக்காது என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஒரிசா மாநில இசை பல பெங்காலிப் படங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது அனிருத் 'பேட்ட' சிங்கிள் பாடலுக்கு ஒரேயடியாக பில்ட்-அப் கொடுத்து வருகிறார், மேலும் பாடலைக் கேட்பதற்கு 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா டோலுமா' போடலைப் போலவே உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.