பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு அவரது நெருங்கிய உறவினரான அனிருத் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'பேட்ட'. பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தங்களது பங்கு ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பெரிய பில்ட்அப் கொடுப்பார்கள். அதையெல்லாம் மிஞ்சம் வகையில் அனிருத் கொடுத்த பிலட்-அப் தான் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து காரசாரமான விவாதமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கே உரிய குத்துப் பாடலாக அமைந்த 'மரண மாஸ்' என்ற பேட்ட படத்தின் சிங்கிள் பாடலை நேற்று வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பறையிசையைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் அனிருத். அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு வீடியோ ஒன்றை நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இந்த உலகத்திலேயே இப்படி நடந்திருக்காது என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஒரிசா மாநில இசை பல பெங்காலிப் படங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது அனிருத் 'பேட்ட' சிங்கிள் பாடலுக்கு ஒரேயடியாக பில்ட்-அப் கொடுத்து வருகிறார், மேலும் பாடலைக் கேட்பதற்கு 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா டோலுமா' போடலைப் போலவே உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




