இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு அவரது நெருங்கிய உறவினரான அனிருத் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'பேட்ட'. பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தங்களது பங்கு ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பெரிய பில்ட்அப் கொடுப்பார்கள். அதையெல்லாம் மிஞ்சம் வகையில் அனிருத் கொடுத்த பிலட்-அப் தான் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து காரசாரமான விவாதமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கே உரிய குத்துப் பாடலாக அமைந்த 'மரண மாஸ்' என்ற பேட்ட படத்தின் சிங்கிள் பாடலை நேற்று வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பறையிசையைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் அனிருத். அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு வீடியோ ஒன்றை நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இந்த உலகத்திலேயே இப்படி நடந்திருக்காது என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஒரிசா மாநில இசை பல பெங்காலிப் படங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது அனிருத் 'பேட்ட' சிங்கிள் பாடலுக்கு ஒரேயடியாக பில்ட்-அப் கொடுத்து வருகிறார், மேலும் பாடலைக் கேட்பதற்கு 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா டோலுமா' போடலைப் போலவே உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.