இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு அவரது நெருங்கிய உறவினரான அனிருத் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'பேட்ட'. பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தங்களது பங்கு ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பெரிய பில்ட்அப் கொடுப்பார்கள். அதையெல்லாம் மிஞ்சம் வகையில் அனிருத் கொடுத்த பிலட்-அப் தான் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து காரசாரமான விவாதமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கே உரிய குத்துப் பாடலாக அமைந்த 'மரண மாஸ்' என்ற பேட்ட படத்தின் சிங்கிள் பாடலை நேற்று வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பறையிசையைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் அனிருத். அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு வீடியோ ஒன்றை நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இந்த உலகத்திலேயே இப்படி நடந்திருக்காது என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஒரிசா மாநில இசை பல பெங்காலிப் படங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது அனிருத் 'பேட்ட' சிங்கிள் பாடலுக்கு ஒரேயடியாக பில்ட்-அப் கொடுத்து வருகிறார், மேலும் பாடலைக் கேட்பதற்கு 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா டோலுமா' போடலைப் போலவே உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.