எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல தரமான படங்களை இயக்கியவர். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என். ஜி. கே, நானே வருவேன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை பிஸியாக இயக்கி வருகிறார். இப்போது செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் புதுப்பேட்டை 2ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " புதுப்பேட்டை 2ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட 80 சதவீதங்கள் முடிவடைந்ததுள்ளது. புதுப்பேட்டை 2ம் பாகம் முழுக்க முழுக்க பையன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகரும். புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான சவால் அதில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றாக சேர்ப்பது தான். ஆனால், என் உயிர் உள்ளவரை புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் " என தெரிவித்தார்.