மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல தரமான படங்களை இயக்கியவர். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என். ஜி. கே, நானே வருவேன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை பிஸியாக இயக்கி வருகிறார். இப்போது செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் புதுப்பேட்டை 2ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " புதுப்பேட்டை 2ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட 80 சதவீதங்கள் முடிவடைந்ததுள்ளது. புதுப்பேட்டை 2ம் பாகம் முழுக்க முழுக்க பையன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகரும். புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான சவால் அதில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றாக சேர்ப்பது தான். ஆனால், என் உயிர் உள்ளவரை புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் " என தெரிவித்தார்.