பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல தரமான படங்களை இயக்கியவர். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என். ஜி. கே, நானே வருவேன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை பிஸியாக இயக்கி வருகிறார். இப்போது செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் புதுப்பேட்டை 2ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " புதுப்பேட்டை 2ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட 80 சதவீதங்கள் முடிவடைந்ததுள்ளது. புதுப்பேட்டை 2ம் பாகம் முழுக்க முழுக்க பையன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகரும். புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான சவால் அதில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றாக சேர்ப்பது தான். ஆனால், என் உயிர் உள்ளவரை புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் " என தெரிவித்தார்.