ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முதல் படமான வாகை சூடவா படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான். அதன்பிறகு வத்திக்குச்சி, குட்டிப்புலி, நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ், அமரகாவியம் படங்களில் தன் இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.
கமல்ஹாசனின் ஆஸ்தான இசை அமைப்பாளராகி உத்தம வில்லன், தூங்காவனம், விஸ்வரூபம் 2 படங்களுக்கு இசை அமைத்தார். அறம், மகளிர் மட்டும், தீரன் அதிகாரம் ஒன்று, ஆண் தேவதை, ராட்சசன் என அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தற்போது விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான், ஹன்சிகாவின் மகா, மாதவன் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் படம், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, இது வேதாளம் சொல்லும் கதை, ஹவுஸ் ஓனர், ஹோம் மினிஸ்டர், உள்துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .
ஜிப்ரானுக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை, இங்கிலாந்து பார்லிமென்ட்டில் இசைக்கான கான்புல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது: சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கவுரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதேவேளையில், என் மீதும், என் இசையின் மீதும் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது என்றார் ஜிப்ரான்.