விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கஜா புயலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் எல்லாம் உதவி செய்து கொண்டிருக்க, நடிகர் அஜித் மட்டும் கோவாவுக்கு சென்று விட்டார். அவர், இப்படி ஒதுங்கி இருப்பது ஏன் என்று புரியவில்லை என, சிலர் அங்கலாய்த்தனர்.
ஆனால், அஜித், தன்னுடைய உதவியாளரை அழைத்து, ரூபாய் பதினைந்து லட்ச ரூபாய்க்கு, செக் போட்டுக் கொடுத்து, அதை, முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்க்குமாறு கூறினார். அதையடுத்து, முதல்வர் நிவாரண நிதிக்கு, அஜித்தின் செக் கொண்டு சேர்க்கப்பட்டது.
அப்போது, இந்த செக்கை, நீங்களே நேரடியாக, முதல்வரை சந்தித்து கொடுத்து விடலாம். அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என, அஜித்தின் நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அதை மறுத்த அஜித், இந்த விஷயத்திலெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது. யாருக்கு உதவி சென்று சேர வேண்டுமோ, அது சரியான நேரத்தில் போய்ச் சேர வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
 
           
             
           
             
           
             
           
            