ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்து இயக்கும் படம் ஐங்கரன். ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், காளி வெங்கட், ஹரீஷ் பெரடி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். காமென் மேன் பிக்சர்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் ரவி அரசு கூறியதாவது:
இது சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம். ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் என்ஜினீயர்கள் படித்து முடித்து விட்டு வெளியில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே படித்த படிப்புக்கு சம்பந்தமான வேலை கிடைப்பதில்லை. சம்பளத்திற்காக ஏதோ ஒரு வேலையை செய்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கிறவர்கள் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ படித்த படிப்பு தொடர்பான வேலைகளைத்தான் செய்வேன். வெளிநாட்டு வேலைக்கு செல்ல மாட்டேன் என்ற கொள்கை உடையவன். கற்ற கல்வியை வைத்து இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய நினைக்கிறான். ஆனாலும் குடும்பம் முதல் சமூகம் அவரை அவனது முயற்சிக்கு தடைபோடுகிறது. அதையும் மீறி அவன் தன் லட்சியத்தில் எப்படி ஜெயிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
ஜி.வி.பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரியாக நடிக்கிறார். இதுவரை நடித்திரா அளவிற்கு காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்திருக்கிறார். இந்தப் படம் அவரை மாஸ் ஹீரோவாக அடையாளம் காட்டும். மகிமா நம்பியார் நர்ஸாக நடிக்கிறார்.
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் பிரச்சினைகளை படம் பேசுகிறது. வெறும் பட்டதாரிகளை உருவாக்கி கொண்டே போவது நாட்டுக்கு நல்லதல்ல. அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்பது பற்றியும் படம் பேசுகிறது. என்றார்.