மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் பாசில், சமந்தா, நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடித்த நதியா, பின்னர் திடீரென விலகினார், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். நதியா ஏன் விலகினார் என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மிஷ்கினை, நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கினர். காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின், "என்னை நிஜமாகவே அடியுங்கள்" என்று நதியாவிடம் கூறியிருக்கிறார். அதனால் நதியாவும் நிஜமாகவே அடித்துள்ளார். ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பு நதியாவிடமிருந்து வரவில்லை. இரண்டு நாட்கள் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. நதியா 56 டேக்குகளில் 56 முறை நிஜமாகவே மிஷ்கினை அடித்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப்போன நதியா, இதற்கு மேல் என்னால் நடிக்க முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று படத்திலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன், இரண்டே டேக்கில் இரண்டே அடி அடித்து டேக்கை ஓகே பண்ணினார். என்கிறார்கள்.
ஆனால் நிறைய அடி வாங்கிய மிஷ்கின், "இனிமேல் அவரிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன். நான் விலகி கொள்கிறேன்" என்று சொன்னதாகவும், "நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க" என்று நதியாவை வைத்துக் கொண்டே பேசியதாகவும், இதனால் அவர் கோபித்துக் கொண்டு படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.




