விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் பாசில், சமந்தா, நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடித்த நதியா, பின்னர் திடீரென விலகினார், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். நதியா ஏன் விலகினார் என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மிஷ்கினை, நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கினர். காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின், "என்னை நிஜமாகவே அடியுங்கள்" என்று நதியாவிடம் கூறியிருக்கிறார். அதனால் நதியாவும் நிஜமாகவே அடித்துள்ளார். ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பு நதியாவிடமிருந்து வரவில்லை. இரண்டு நாட்கள் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. நதியா 56 டேக்குகளில் 56 முறை நிஜமாகவே மிஷ்கினை அடித்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப்போன நதியா, இதற்கு மேல் என்னால் நடிக்க முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று படத்திலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன், இரண்டே டேக்கில் இரண்டே அடி அடித்து டேக்கை ஓகே பண்ணினார். என்கிறார்கள்.
ஆனால் நிறைய அடி வாங்கிய மிஷ்கின், "இனிமேல் அவரிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன். நான் விலகி கொள்கிறேன்" என்று சொன்னதாகவும், "நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க" என்று நதியாவை வைத்துக் கொண்டே பேசியதாகவும், இதனால் அவர் கோபித்துக் கொண்டு படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.