'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்த சர்க்கார் படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. தமிழகம் முழுக்க சுமார் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் சென்னையில் உள்ள ஏஜிஎஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு சர்க்கார் படத்தை கொடுக்க மறுத்து விட்டதாக கடந்த சில தினங்களாக படத்துறையில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.
தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு சொந்தமான ஏஜிஎஸ் சினிமா என்கிற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சென்னையில் தி.நகர். வில்லிவாக்கம், மதுரவாயல், ஓஎம்ஆர் போன்ற இடங்களில் உள்ளன.
சர்கார் படத்தின் சென்னை, செங்கல்பட்டு ஏரியாவின் உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள், ஏஜிஎஸ் குழும தியேட்டர்களுக்கு சர்கார் படங்களை தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதன் பின்னணி காரணம் என்ன என்று விசாரித்தபோது....
சர்கார் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை வாங்கும்படி ஏஜிஎஸ் நிறுவனத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். இந்த காரணங்களுக்காகவே அவர்களுக்கு படம் கொடுக்க மறுப்பதாக படத்துறையில் ஒரு பேச்சு நிலவுகிறது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சர்கார் படத்தை ஏஜிஎஸ் தியேட்டர்களுக்கு கொடுக்கவில்லை என்ற தகவல் அறிந்ததும் விஜய் அப்செட்டில் இருக்கிறாராம்.
காரணம் ஏஜிஎஸ் தியேட்டர்களில் மட்டுமே சுமார் இரண்டரை கோடிகளுக்கு மேல் ஷேர் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு வசூலிக்கும் ஏஜிஎஸ் தியேட்டர்களுக்கு படம் கொடுக்கவில்லை என்பது விஜய்யை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறதாம்.